திருகோணமலை செருவவிலா மங்கள ராஜ விகாரை - இது இலங்கையில் இருக்கின்ற 17 புனித பௌத்த விகாரங்களில் ஒன்று. புத்தரின் நெற்றிப் பகுதி எலும்பின் சிறு பகுதி பாதுகாக்கப்படும் புனிதப் பகுதியாக இது கருதப்படுகின்றது.
கிமு 2ஆம் நூற்றாண்டு காலகட்டத்தின் கட்டுமானம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிய வளாகத்தில் பண்டைய சிதலம் அடைந்த பகுதிகளும் காணப்படுகின்றன. அவற்றிற்கிடையே புதிய கட்டுமானங்கள் அழகாக அமைந்திருக்கின்றன.
No comments:
Post a Comment