தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் நேரடி களப்பணியின் போது செய்யப்பட்ட ஆவணப் பதிவு.
ஆனைமங்கலம் கோயிலின் இன்றைய நிலை
சோழப் பேரரசன் முதலாம் ராஜராஜன் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரை கட்டுவதற்காக நிலக்கொடை வழங்கிய ஊர் ஆனைமங்கலம். இந்த ஆனைமங்கலத்தில் மாமன்னன் ராஜராஜன் காலத்து சிவாலயம் ஒன்று பாழடைந்த நிலையில் தற்சமயம் உள்ளது.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் குழுவினர் கடந்த 2022 - டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி இந்த ஆனைமங்கலம் பகுதிக்கு நேரில் சென்றிருந்த போது கோயிலின் இன்றைய நிலையை ஆவணப்படுத்த பதியப்பட்ட காணொளிப் பதிவு இது.
No comments:
Post a Comment