சென்னை புழல் நகரில் இன்று ஒரு புதிய பௌத்த விகாரையின் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. அதன் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்த திரு கௌதம் சன்னாவுடன் சென்றிருந்தபோது இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. திரு கௌதம சன்னா இந்த தாய்லாந்தில் இருந்து தருவிக்கப்பட்ட பௌத்த சிலையைத் திறந்து வைத்தார்.
தாய்லாந்தில் இருந்து வந்திருந்த பௌத்தப்பிக்குகள் இருவர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு சேர்த்தனர். அதுமட்டுமின்றி தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட பௌத்தர் சிலை அடிக்கல் நாட்டப்பட்ட பகுதியில் வைக்கப்பட உள்ளது. சென்னை புழல் பகுதியில் உள்ள மக்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்து கலந்து கொண்டு புத்தபிரானுக்கு மலர்கள் தூவி வழிபாடு செய்தனர்.
தாய்லாந்தில் இருந்து வந்த பௌத்தப்பிக்குகள் பாலி மொழியில் மந்திரங்கள் சொல்லி பூஜை செய்தனர்.
இன்றைய காலைப் பொழுது இனியதொரு அனுபவமாக அமைந்தது.
No comments:
Post a Comment