Friday, January 31, 2025

10. பௌத்த உவா பண்பாடு - இலக்கியம் முதல் கல்வெட்டு வரை - உரை

பௌத்த உவா பண்பாடு - இலக்கியம் முதல் கல்வெட்டு வரை : திரு. இ.ஜெயபிரகாஷ்

தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 10




Friday, January 24, 2025

9. தமிழ்ப்புலவர்கள் பௌத்தத்தைப் போதித்த வரலாறு - உரை

தமிழ்ப்புலவர்கள் பௌத்தத்தைப் போதித்த வரலாறு: முனைவர். க.ஜெயபாலன்

25.01.2025

தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 9



Friday, January 17, 2025

8. தென்னிந்தியாவில் பௌத்த சமயத் தொல்லியல் சான்றுகள் - உரை

தென்னிந்தியாவில் பௌத்த சமயத் தொல்லியல் சான்றுகள் - முனைவர் வீ.செல்வகுமார்

18.1.2025

தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 8



Saturday, January 11, 2025

7. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டில் தமிழ் பௌத்த இதழ்கள் - உரை

18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டில் தமிழ் பௌத்த இதழ்கள்: 

முனைவர் J.பாலசுப்பிரமணியன் உதவிப்பேராசிரியர்

ஜனவரி 11, 2025 



Friday, January 3, 2025

6. மகதை நாட்டில் பௌத்தம் - உரை

மகதை நாட்டில் பௌத்தம் - ஆறகளூர் பொன். வெங்கடேசன்

01.04.2025

தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 6



Friday, December 27, 2024

5. களப்பிரர்களின் பௌத்த பேரரசு ஆட்சியும் வீழ்ச்சியும் - உரை

களப்பிரர்களின் பௌத்த பேரரசு ஆட்சியும் வீழ்ச்சியும் - முனைவர் ஆ.பத்மாவதி

28.12.2024

தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 5






Saturday, December 21, 2024

4. கடலூர் மாவட்டத்தில் பௌத்த தடயங்கள் - உரை

கடலூர் மாவட்டத்தில் பௌத்த தடயங்கள் - முனைவர் J.R.சிவராமகிருஷ்ணன்

22.12.2024

தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 4



Wednesday, December 18, 2024

The World of the Tamil Merchant

 


க.சுபாஷிணி

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக எனக்குத் தெரிந்து என் வீட்டில் உள்ள நூல்களை நான் யாருக்கும் வாசிப்பதற்கு கடன் கொடுப்பதில்லை. 🙂 ஆனாலும் சென்னையில் வீட்டிற்கு வருகின்ற சில நண்பர்கள் வீட்டு நூலகத்தில் உள்ள எனது சேகரிப்பில் இருந்து எப்படியோ சில நூல்களை எடுத்துச் சென்று விடுகிறார்கள். அப்படி நான் வாங்கி வைத்திருந்து தொலைத்த நூல்கள் ஒன்று கனகலதா முகுந்த் எழுதிய the world of the Tamil merchant. நம் வீட்டு நூலகத்தில் 

நாம் விழுந்து விழுந்து தேடினாலும் யாரோ எடுத்துச் சென்றுவிட்ட நூலை கண்டுபிடிக்க முடியாது. ஆக என்ன செய்வது? மீண்டும் ஆர்டர் செய்து வாங்க வேண்டியது தான். 🙁

சென்ற வாரம் அமேசானில் தேர்ந்தெடுத்து இவ்வார தொடக்கம் இரண்டு நூல்கள் வாங்கினேன். அதில் ஒன்று இது.

ஏற்கனவே வாசித்திருந்தாலும் பண்டைய தமிழகத்தின் வணிகம் தொடர்பான ஒரு நூல் என்ற வகையில் மீண்டும் இதனை வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நேற்றும் இன்றும் இரு நாட்கள் இந்த நூலை வாசித்து முடித்தேன். கீழ்க்காணும் ஐந்து தலைப்புகளில் இந்த நூல் தமிழகத்தின் வணிகர்களின் உலகை நம் கண் முன்னே கொண்டு வந்து காட்ட முயற்சி செய்கிறது.

1. Merchants and Trade in the Pre-Modern Era: Issues and Insights

2.Trade and Merchants in Ancient Tamilakam

3. State, Polity and Overseas Relations under the Tamil Kingdoms

4. The Temple, Nagaram and Merchants: A Study in Synergy

5.The Tamil Merchant Down the Ages: A Retrospect

AHIMSA நூலில் திரு தேவ்தத் குறிப்பிட்டிருப்பது போல சிந்துவெளி பண்பாட்டின் மக்களது வாழ்க்கை வணிகத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததன் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் பண்பாட்டை நமக்கு இன்றைக்கு கிடைக்கின்ற சங்க இலக்கியச் சான்றுகளும் தொல்லியல் அகழாய்வுச் சான்றுகளும் காட்டுகின்றன. இந்த நூலும் நமக்கு நன்கு பரிச்சயமான  மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை போன்ற சங்க இலக்கியங்களையும் சிலப்பதிகாரம், மணிமேகலை குறிப்புகளையும் விளக்குகிறது. கூடுதலாக சில அகழாய்வுச் செய்திகளையும் தருகின்றது. 

இந்த நூலில் என் கவனத்தை கவர்கின்ற ஒரு பகுதியாக அமைவது நகரம், வணிகர்கள், நகரத்தார்கள் என்ற தலைப்பிலான விவரங்கள். 

நூலில் தமிழ்நாட்டு வணிகக் குழுக்கள் பற்றி ஒரு தனி அத்தியாயம் அமைந்திருக்கின்றது. அதில் தனிநபர் வணிகர்கள், நகரத்தார் வணிகர்கள் மற்றுமன்றி அமைப்பாக வணிகக் குழுக்களாக இயங்கிய அமைப்புகளை நூலில் ஆசிரியர் விளக்குகின்றார். நெடுந்தூரம் பயணம் செய்து கடல் கடந்து வணிகம் செய்த வணிகர்களில் மணிகிராமத்தார், திசையாயிரத்து ஐநூற்றுவர், ஐநூற்றுவர், நானாதேசி, வளஞ்சியார் அஞ்சுவண்ணம், சித்திரமேளி பெரியநாடு போன்ற குழுக்கள் பற்றிய செய்திகளும் தரப்பட்டுள்ளன. 

களப்பிரர் ஆட்சி செய்த காலம் இருண்ட காலம் என இலக்கியங்கள் கூறுகின்றன என ஆங்காங்கே நூலில் குறிப்பிடப்படுகிறது. பௌத்தமும் சமணமும் முக்கியத்துவம் பெற்ற ஆனால் அயல் நாட்டில் இருந்து வந்தவர்கள் ஆட்சி செய்த காலம் என இதனை நூலாசிரியர் நிறுவ முயற்சிக்கிறார். இந்த நூலுக்கு பின் வந்த முனைவர் பத்மாவதியின் "களப்பிரர் காலம்" நூல் இந்த செய்திகளுக்கு மாற்றுக் கருத்தை வழங்குகின்றன. 

மேலும், நூலாசிரியர் சைவம், வைணவம் என்பதற்கு பதிலாக "இந்து மதம்" என்று பொதுமைப்படுத்தி குறிப்பிடுகின்றார். மட்டுமன்றி மலாயா இந்தோனேசியா தீவுக் கூட்டங்களை ஆட்சி செய்த ஸ்ரீ விஜயப்பேரரசு புத்த மதம் சார்ந்த ஓர் அரசு என்பதை விடுத்து இந்து மதம் சார்ந்த அரசு என்றும் குறிப்பிடுகின்றார். இவை ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்கள். இவை தவிர்த்து நூலில் ஆசிரியர் வழங்கி இருக்கின்ற தகவல்கள் பல நூல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவையாக அமைகின்றன.

தமிழ்நாட்டின் தமிழ் பண்பாட்டையும் வரலாற்றையும் ஆய்வு செய்கின்ற தமிழ் உலகம் பொதுவாகவே கலைகள், தெய்வங்கள் என்ற பார்வைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வணிகத்தின் மேன்மையை குறைத்து பார்ப்பதாகவே நான் நினைப்பதுண்டு.   பண்டைய தமிழ் நிலத்தின் வணிகப் பரப்பு என்பது மிகப் பெரிது என்றே இன்று நமக்கு கிடைக்கின்ற ஆவணங்கள் உறுதி செய்கின்றன. அந்த வகையில் தமிழ் நிலத்தின் வரலாற்றை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களது பார்வை தமிழ்நாட்டின் வணிகத்தை முன்னிலைப்படுத்தி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. வணிகம் அது தருகின்ற பொருளாதார மேன்மை போன்ற சிந்தனைகள் தான் இன்று நமக்கு அவசியம். 

மிக நீண்ட காலமாக கடல் வணிகத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் சீனா இன்று உலக வணிக வல்லரசாக உயர்ந்துள்ளது. வணிக சிந்தனைக்கு மட்டுமல்லாது முறையான ஆவணப்படுத்துதலையும் மிக நீண்ட காலமாகச் செயல்படுத்தி வரும் வழக்கம் சீனப்பேரரசில் அடிப்படையான ஒன்றாக இருந்தது. சீனர்களின் கட்டொழுங்கும் கடமைப்பாடும் பொருளாதார ஆர்வமும் நமது சிந்தனைக்குள் மீண்டும் நிலை பெற வேண்டும். அந்த வகையில் தமிழ்நாட்டு வணிகம் பற்றி பேசுகின்ற இத்தகைய நூல்கள் பற்றிய செய்திகள் நம்மிடையே அதிகம் வலம்வர வேண்டும்.

 நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள். இந்த நூல் பென்குவின் வெளியீடாக வந்துள்ளது. விலை இந்திய ரூபாய் 299. 

-சுபா

18.12.2024

Saturday, December 14, 2024

3. கோயில்களில் புத்தத் தடயங்கள் - உரை

கோயில்களில் புத்தத் தடயங்கள் - முனைவர் ராஜேஸ்வரி செல்லய்யா

15.12.2024

தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 3



Saturday, December 7, 2024

2. நாகப்பட்டின பௌத்த சின்னங்கள் - உரை

நாகப்பட்டின பௌத்த சின்னங்கள் - முனைவர் க. சுபாஷிணி

தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 2

08.12.2024




Saturday, November 30, 2024

1. களப்பிரர்களும் பௌத்த பேரரசு உருவாக்கமும் எழுச்சியும் - உரை

களப்பிரர்களும் பௌத்த பேரரசு உருவாக்கமும் எழுச்சியும் - முனைவர் ஆ.பத்மாவதி

தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 1

01.12.2024



Sunday, November 24, 2024

அவலோகிதேஸ்வர் - பீடோர், மலேசியா



பொதுவாகவே மலேசியாவில் அகழாய்வுகள் என ஆராயும் போது நமக்குத் தெரிவது பூஜாங் பள்ளத்தாக்கு அகழாய்வுகள் பற்றிய செய்திதான். ஆனால் தீபகற்ப மலேசியாவின் பல பகுதிகளில் ஸ்ரீ விஜயப் பேரரசு காலத்து வரலாற்றுச் சான்றுகள் பல, அகழாய்வுப் பணியின் போதும் கட்டுமான பணிகளின் போதும் கிடைத்துள்ளன.

இங்கு புகைப்படத்தில் இருப்பது பேராக் மாநிலத்தில் உள்ள பீடோர் என்ற பகுதியில் ஈயச் சுரங்கத்தில் குழியைத் தோண்டிய போது அங்கு கிடைத்த பௌத்த அவலோகிதேஸ்வர் வெண்கல சிற்பம். 1936ஆம் அது இது கண்டுபிடிக்கப்பட்டது.
-சுபா

Saturday, November 2, 2024

"The Silk Road Journey with Xuanzang"- திறனாய்வு





 "The Silk Road Journey with Xuanzang"- Sally Hovey Wriggins திறனாய்வு முனைவர் சுபாஷினி

யுவான் சுவாங்கின் பட்டுப் பாதை வரலாற்றுப் பயணம்  - நூல் திறனாய்வு


https://www.youtube.com/live/7WFn8Ybe2tc