Thursday, December 28, 2023

பினாங்கு கேக் லோக்சி சீனர் கோயில்

 


இங்க புத்தர் ஆலயத்தில் உள்ள தராதேவி சிலை ( க்வான்யிங்) மிகப் பிரசித்தி பெற்ற ஒன்று.

மலைப்பகுதியில் அமைந்திருக்கும் கோயில்கள் அடிக்கடுக்காக அமைக்கப்பட்டுள்ளன. பிரம்மா புத்தர் சிலைகள் ஒவ்வொரு இடங்களிலும் அலங்கரிக்கின்றன.












Sunday, December 10, 2023

ராஜராஜனின் கொடை - திறனாய்வு

 


அர்ஷா

உலகெங்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள்  இன்று,  காரணம்  ஈழத்துப்போர்  அவர்கள் சென்ற வழித்தடங்கள் மிகவும் ரத்தகரை படிந்தது. இரண்டாம்  தலைமுறை தம் கால்களில் நிற்க ஆரம்பித்த பிறகுச் சற்று ஆசுவாசக் கொள்கிறோம்.

இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பாக, சீனா ஜப்பான், கொரியா,மீயான் மார்க், லாவோஸ், வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, மலாய் தீவுகள், என மத்திய கிழக்காசிய நாடுகளைத் தாண்டி நம் முன்னோர்கள் தமிழ் மொழி பண்பாடு  தாம் பின்பற்றிய மதங்களையும் பல்வேறு நாடுகளுக்கு சென்றடைய காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் கலந்த  மகிழ்ச்சி. 

பள்ளிக்காலத்திலேயே வரலாறு பாடப்புத்தகத்தை  பள்ளிக்கல்வித்துறை சேர்த்து இருந்தது.   நான் படித்த வரலாற்றுப் புத்தகங்கள் முழுவதும் ஆட்சி முறைகள்,  மன்னர்களைக் குறித்தது. அந்த வரலாற்றுப் புத்தகங்கள் முழுவதுமாக  ஒருவரை வெறிகொண்டு  தாக்கி கொலை செய்து ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறுகளாக இருந்தன. மேலும் அவை கற்பனை மிகுந்த புனைவுகளையும் கொண்டிருந்தது அதனால் எதை நம்புவது எதை விடுவது என்று சந்தேகத்தில் வரலாற்றுப் பதிவுகளைப் படிக்கும்போது எப்போதுமே முழுமைய நம்பிக்கை வருவதில்லை.  

சோழ மன்னர்களின் ஆட்சி இலங்கை வரை நீடித்திருந்ததையும், சோழப் பேரரசு இலங்கையிலிருந்து மிகப்பெரிய செல்வங்களை அங்கிருந்து சூறையாடி வந்தார்கள்  என்ற கதைகள்   உண்மைதானா என்று அறியும் ஆவல்  எப்போதும் எனக்கு இருக்கிறது.

2000 ஆண்டுகளுக்கு முன்பாக செல்வம் கொழித்த நாடா இன்று,  பசியிலும் பஞ்சத்தாலும் வாடுகிறது, அன்றைய காலத்தில் தமிழன்  அங்கு இருந்திருந்தால்  இன்று 200 ஆண்டுகளுக்கு முன்பாக சென்ற தமிழினம் அவர்களை  சந்திக்கவே இல்லையா என்று எத்தனையோ கேள்விகள் எழும்போது வரலாற்றை மீண்டும் தேடுகிறோம்.

இலங்கையின் வரலாற்று புத்தகங்களை படிக்கும் போது, அவை பல குழப்பங்களை கொண்டு வரும்  சில பெயர்கள் மீண்டும் மீண்டும் வரும் ஆனால் மிக நீண்ட காலம் வித்தியாசம் இருக்கும் அப்படியானால் அவன் இருந்திருப்பான் இவன் புதியவனாக இருக்க வேண்டும் புதியவனுக்கு ஏன் அவன் பெயரை வைத்தார்கள், ஒருவனுக்கே பல பெயர்கள் இருக்கும். குழப்பங்களை தாண்டி தீர்வுகளை தேடுவது தானே வாழ்க்கை அந்த வகையில் சமீபத்தில் படித்த மிக முக்கியமான ஒரு நூலாக ராஜராஜனின் கொடையை நான் பார்க்கிறேன். முனைவர் சுபாஷினி அவர்களால் எழுதப்பட்டு தமிழ் மரபு அறக்கட்டளை வழியாக வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை கடுமையான மழையில்  மூழ்கி இருந்தபோது என்னை முழுவதுமாக மூழ்கடிக்க செய்த நூல்.

பக்கத்திற்கு பக்கம் ஏகப்பட்ட தகவல்கள் அத்தனையும் ஆதாரங்களோடு குறிப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று பேனாவையும் டைரியும்  பக்கத்தில் வைத்துக் கொண்டேன்.  எதை எடுப்பது எதை விடுவது என்று தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு வரிக்கு வரி தகவல்கள் நிறைந்ததாகவே இருந்தது இந்த புத்தகமே ஒரு குறிப்பு தான். இந்த குறிப்பேட்டை வைத்துக்கொண்டு தேடிப் படிக்க அறிந்து கொள்ள நிறைய இருக்கின்றன என்பதை  வாசிப்பின் ஓட்டத்தில் உணர்ந்து கொண்டேன்.

 ராஜராஜ சோழன் என்றால் அனைவருக்கும் ஒரு தனித்த உணர்வைத் தரும். சிலருக்கு அவன் மீது கோபம் பலருக்கு அவன் மீது காதல்.

தலைவனுக்கு உரிய சகல பண்புகள் நிறைந்த ஒருவனாக ஆட்சியும் எல்லைக்கோட்டை தமிழகம் இந்தியா என்ற வட்டத்துக்குள் வரையாமல்  தன் விடாமுயற்சி  நேர்த்தியான திட்டமிடலால்  உலகெங்கும் பரவச் செய்த ஒருவன். 

 "ராஜராஜனின் கொடை"  என்ற இந்த நூலில், மொத்தம் ஒன்பது கட்டுரைகள்  அவை விஜயநகர பேரரசு நாகப்பட்டினம் சூளாமணி பன்ம விகாரை  சோழர் செப்பேடுகள் சோழர்களின்  கடாரப் படையெடுப்பு ஆனைமங்கல செப்பேடுகளுக்கும் கடாரப்படையெடுப்புக்கும் இடையிலான விவரிப்பு,  இவை தாண்டி  இங்க இருக்க வேண்டிய பரபரப்பாக பேசப்பட்ட  பெரிய லைய்டன் செப்பேடுகள் சிறிய  லெய்டன்  செப்பேடுகள்   நெதர்லாந்துக்கு சென்ற பின்னணி  செப்பேடுகள் கூறும் தகவல்கள் வரிக்கு வரி என்னென்ன  என்பது குறித்தெல்லாம் மிக விவரமாக கூறப்பட்டுள்ள  நூலாக அமைந்திருக்கிறது.

 நூலின் ஆசிரியர் ஆனைமங்கல செப்பேடுகள் பற்றி அறிந்ததும்  அவை எங்கு இருக்கின்றன என்ற ஆராய்ச்சியில் மூன்று ஆண்டுகளாக தேடி  இறுதியில் அவை நெதர்லாந்து நாட்டில் உள்ள லெய்டன்  பல்கலைக்கழக நூலகப் பிரிவினரால்  பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பதை அறிந்தவுடன், அவர்கள் அனுமதியோடு நேரில் சென்று ஆனிமங்கல செப்பேடுகளை  பார்வையிட்டு அதனை பல மணி நேரங்கள் செலவு செய்து  குறிப்புகளாக இப்ப புத்தகத்தில்  தந்துள்ளார்  படிக்கும் போது ஆச்சரியமாகவும் பெரும் மகிழ்ச்சியாகவும் பெருமை நிறைந்த தருணம் ஆகவும் இருந்தது அந்தப் பக்கங்கள். அவற்றோடு நிறுத்திக் கொள்ளாமல் ஆசிரியர் தொடர்ச்சியாக  தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஆணைமங்கல செப்பேடுகளை தம் தாய் நாட்டுக்கே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பேரவாவில்  உடனடியாக தமிழக அரசோடு தொடர்பு கொண்டு  அதனை சட்டரீதியாக எடுத்து வரும் முயற்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பன குறித்த தகவல்களையும் கட்டுரைகள் படிக்கும் போது  புல்லரிக்கச் செய்தது உண்மை. 

அன்றைய தமிழர்கள்  இரண்டு காரணங்களுக்காக கடல் கடந்து பிற நாடுகளில் சென்றடையும் பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள்.   முதலாவது காரணம் தம் மதங்களை பரப்புவது,  அது அன்றைய சூழ்நிலையில் பௌத்த மதமாக இருக்கலாம். இரண்டாவது முக்கிய காரணம் மிகவும் ஆளுமை நிறைந்த வணிகர்களைக் கொண்டிருந்த  தமிழ்ச் சூழல்,  ஐரோப்பா மத்திய கிழக்காசிய நாடுகளை மட்டும் இன்றி இந்தோனேசிய நாடுகளுக்கும் மலாய் தீவுகளுக்கும் தொடர்ச்சியாக மிக நீண்ட காலமாக  வணிக நிமிர்த்தமாக  சரளமாக போய்வந்திருக்கிறார்கள்.

செப்பேடுகளை ஆராயும் போது, இந்த வணிகப் பயணத்திற்கு  மிகவும் அதிகமாக விஜயநகர பேரரசு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான பெரும்பாலமாக மையப் பகுதியாக துறைமுகங்களைக் கொண்ட நகரமாக விளங்கி இருப்பதுஅதற்கு ஒரு காரணம்.

 திருகோணமலையில் இயற்கை துறைமுகத்தை கொண்ட இலங்கை இன்று எங்கனம்  வணிக போக்குவரத்துக்கு முக்கிய இடமாக பங்களிப்பு செய்கிறதோ அதுபோல இது என்று புரிந்து கொள்ளலாம்.

 அதேபோன்றுதான் நாகப்பட்டினம் துறைமுக நகரம் என்றே சொல்லும் அளவிற்கு மிக நீண்ட காலமாக வணிக மையமாகவும் பௌத்த சமய மையமாகும் நாகப்பட்டினம் திகழ்ந்து இருக்கிறது. நாகப்பட்டினம் கட்டுரை வழியாக அறிய முடிகின்றது அதேபோல் நூலாசிரியர் அங்கு அகழாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு பல்வேறு அகழாய்வு பொருட்கள் எங்கு பாதுகாக்கப்படுகின்றன அல்லது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்த கேள்விகளையும் எழுப்பி இருக்கின்றார்.

 இந்த நூலின் முக்கிய பொருள் ஆணைமங்கல சொற்பொழிவுகள்  செப்பேடுகள் என்ன கூறுகின்றன என்பதிலிருந்து தான் முக்கியம் பெரும் மற்ற விஷயங்களை ஆராகின்றார்கள்.. அந்த வகையில் சூளாமணி பன்ம விகாரை மிக முக்கிய இடத்தை வகிக்கிறது, பெரிய லெய்டன் செப்பேடுகளில் சூளாமணி பன்வகாரை குறித்த பல்வேறு தகவல்களை அறிய முடிகிறது, இது மிக முக்கியமான ஆதாரங்களாக பார்க்கப்பட வேண்டியது மாமன் ராஜராஜ சோழன் காலத்தில் ஸ்ரீ விஜய பேரரசுக்கும் சோழ பேரரசுக்கும் நட்புறவு இருந்ததையும் அதனை அவர்கள் செப்பு சாசனம் மூலம் உறுதி செய்து கொண்டதையும் விளங்கிக் கொள்ள முடிகிறது.

 தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கும் போது மிகப்பெரிய சந்தோஷம் ஏற்படும் அந்த பொருளை புதிதாக வாங்கிய போது கிடைத்ததை விட, ஏற்கனவே இருந்த பொருள்  மீண்டும் கிடைத்தது புதிதாக எந்த வரவும் இல்லை ஆனாலும் மகிழ்ச்சி வார்த்தைக்குள் உள்ளடக்க முடியாத ஒன்றுதான்  அப்படித்தான் ஆனைமங்கல செப்பேடுகள்  நெதர்லாந்தில் கிடைக்கப்பெற்ற போது ஆய்வாளர்களுக்கு இருந்திருக்கும் என்று என்னால் உணர முடிகிறது. அந்த சிப்பெடுகள் நெதர்லாந்துக்குச் சென்ற பின்னணி மிகவும் சுவாரசியமான கதை. ஹெச் ஏ ஹமாகர் பற்றிய கதை.

 நூலாசிரியர் செப்பேடுகளை பார்த்ததோடு தன் கடமையை முடித்துக் கொள்ளாமல்  அதனை வரிக்கு வரி மொழிபெயர்த்துள்ளார் அதனையும் நூலில் காண முடிகிறது

 சோழர்களின் கடாரப் படை எடுப்பின் போது சுங்க வரி செலுத்திய விபரங்கள் சோழப் பேரரசின் வணிகக் குழுவை வரவேற்று 81 ஆயிரத்து 800 பணமும் 5,200 டன் வெள்ளியும் பரிசாக அளித்தது என்ற செய்தி வாசிக்கும் போதே ஆச்சரியத்தை தந்தது.

 தெற்காசிய நாடுகளில் கிடைத்த தமிழ் கல்வெட்டுகள் சிலவற்றை குறித்த விபரங்கள் புகைப்படங்களோடு எழுதப்பட்டுள்ளன அவை பெரும்பாலும் வணிக செயல்பாடுகள் குறித்த விளக்கங்களை  ஆதாரங்களே கொண்டிருக்கின்றன என்பது  நம் வணிக மேலாண்மை குறித்த பல்வேறு செய்திகளை அறிய பயன்படுகிறது

 நூலில் இலங்கை ஆதி குடிமகன் யாராக இருந்திருக்க முடியும் என்பது குறித்து ஆராய்ச்சிகளை வாசிக்கும் போது பல கேள்விகளுக்கான விடை கிடைக்கின்றது.

 நூல்  பல்வேறு தேடல்களுக்கான நுழைவுச்சீட்டு ஆக எழுதப்பட்டிருக்கின்றது  இதனை எடுத்துக் கொண்டு நாம் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம்  அரை மனநிலை சந்தேகங்களுக்கு விடை அளிக்கிறது  அனைவரும் படிக்க வேண்டிய  தேடல்களுக்கான ரூட் மேப் என்று சொல்லலாம்.

 அனைவரும் வாங்கி படிக்க வேண்டிய  முக்கியமான  நூல்.  ஆசிரியருக்கு பேரன்புகள் பெரும் கடமைப்பட்டவர்கள் நாங்கள் உங்களுக்கு 🙏❤️

அர்ஷா ❤️

நூலாசிரியர்: க.சுபாஷிணி

பதிப்பகம்: தமிழ் மரபு ரக்கட்டளை

https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation

Monday, December 4, 2023

ஆனைமங்கலம் கோயிலின் இன்றைய நிலை

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் நேரடி களப்பணியின் போது செய்யப்பட்ட ஆவணப் பதிவு.

ஆனைமங்கலம் கோயிலின் இன்றைய நிலை

சோழப் பேரரசன் முதலாம் ராஜராஜன் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரை கட்டுவதற்காக நிலக்கொடை வழங்கிய ஊர் ஆனைமங்கலம். இந்த ஆனைமங்கலத்தில் மாமன்னன் ராஜராஜன் காலத்து சிவாலயம் ஒன்று பாழடைந்த நிலையில் தற்சமயம் உள்ளது.

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் குழுவினர் கடந்த 2022 - டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி இந்த ஆனைமங்கலம் பகுதிக்கு நேரில் சென்றிருந்த போது கோயிலின் இன்றைய நிலையை ஆவணப்படுத்த பதியப்பட்ட  காணொளிப் பதிவு இது.