Saturday, October 23, 2021

தௌலி (ஒரிசா மாநிலம்) — அசோகர் கல்வெட்டு

தௌலி (ஒரிசா மாநிலம்) — அசோகர் கல்வெட்டு: திரு.கௌதம சன்னா

புவனேஸ்வரத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தௌலி (Dhauli) உள்ளது. தௌலி யின் தொன்மையான பெயர் தவளகிரி (Dhavalagiri / வெண்குன்றம் என்று பொருள்).  இங்கிருக்கும் தயா (Daya) ஆற்றங்கரையில்தான் கலிங்கப்போர்(பொ.ஆ.மு. 261) நடந்தது. 

அசோகர் கலிங்க மன்னனுடன் நடத்திய  இப்போரில் தயா ஆற்றின் நீர் குருதியாக ஓடியதாக  அசோகரின் கல்வெட்டு குறிப்பிடுகிறது. தயா ஆற்றின் கரையிலுள்ள தவளகிரி என்னும் குன்றின் கீழே அசோகர் தன் கலிங்கப்படையெடுப்பையும் அகிம்சையை தழுவிக்கொண்டதையும் அறிவிக்கும் புகழ்பெற்ற கல்வெட்டு உள்ளது. இது பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ள மகதி பிராகிருத மொழிக் கல்வெட்டு.