கௌத சன்னா
பல தோழர்கள் பிள்ளையாரைப் பற்றி விளக்கும்படி கேட்டுள்ளனர். அவர்களின் ஆர்வத்திற்காக இந்தச் சிறு விளக்கக் குறிப்பு. நேரம் வாய்க்கும்போது பிற்பாடு விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவாக மனித உடல் மற்றும் மிருகங்களின் தலைகளை இணைத்து உருவங்களை வடிவமைப்பு செய்வது உலகின் பல
பண்டைய பண்பாடுகளில் காண முடியும். பண்டைய கிரேக்கம், எகிப்து, உரோம் மற்றும் பல பண்பாடுகள்.. இந்தியாவில் குறிப்பாகத் தென்னகத்தின் கோயில்களில் யாளி என்கிற சிற்பத்தைப் பார்த்தால் அதற்கும் கணபதிக்கும் எந்த வேறுபாட்டையும் உங்களால் கண்டுபிடிக்க முடியாது. பக்தி மட்டுமே எல்லோர் கண்களையும் மறைத்துவிடும்.
தமிழகத்திற்குப் பரஞ்சோதி மற்றும் நரசிம்மவர்ம பல்லவனால் கொண்டுவரப்பட்ட கணபதி சிலை, வாதாபி கோட்டை வாயிலிலிருந்து பெயர்த்து கொண்டுவரப்பட்டது என்பது ஒரு வரலாற்றுச் செய்திதான். வாதாபி குகைகளில் உள்ள கணபதி சிலைகள் அதை ஓரளவுதான் உறுதி செய்கின்றன. (பார்க்க படம் 3)
வாதாபி கணபதி சிலைகள் தியானத்தில் அமர்ந்து லட்டு சாப்பிடுவதைப் போலவே செதுக்கப்பட்டுள்ளன. எனவே பரஞ்சோதி கொண்டு வந்த சிலையும் லட்டு தின்கிறது.
இதற்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு...?
யானை என்பது புத்தரின் பிறப்பு முதல் இறப்பு வரை உடன்வரும் ஒரு பாத்திரம். அவரது அம்மாவின் கனவில் வந்த வெள்ளை யானை, அவர் அடக்கிய நளகிரியானை, அவருடைய அஸ்திகளைக் கொண்டுபோன அரச யானைகள் என்பதெல்லாம் ஒரு புறம் இருப்பினும்,
பெரும் பலத்தையும் பெரும் அமைதியையும் ஒருசேர பெற்றதுதான் யானை. அது எவ்வாறு தன்னை கட்டி ஆள்கிறது என்பதில்தான் அதன் பலமும் பெருமையும் அடங்கியிருக்கிறது. அதனால் யானையைப் பல இடங்களில் புத்தர் குறித்துக் காட்டியிருக்கிறார். எனவே யானை என்பது பௌத்தத்தின் தவிர்க்க முடியாத குறியீடாக உலகம் முழுமைக்கும் பரவியுள்ளது.
அதேபோல அரச மரத்தினடியில் தியானத்தில் அமர்ந்த புத்தர் சிலையும் அவரது சிந்தனையைக் குறியீடாக போதிக்கிறது. இதை சிதைக்கும் நோக்கில்தான் சைவ எழுச்சியின்போது புத்தரின் சிலைகளில் தலைகள் உடைக்கப்பட்டு. அதற்கு பதில் பல தலைகள் சேர்க்கப்பட்டன. அதில் ஒன்று யானைத்தலை.
அப்படி சேர்க்கப்பட்ட தலைகள் தியான நிலையில் லட்டு தின்றுக் கொண்டுள்ளபடி அமைக்கப்பட்டதை வாதாபி கணபதிகள் உறுதி செய்கின்றன. அந்தச் சிலைக்கு இரண்டு கைகள்தான். பிற்காலத்தில் மேலும் இரண்டு கைகள் சேர்க்கப்பட்டன.
இவையெல்லாம் யாளி என்னும் உறுப்பு சேர்க்கை வகை சிற்பங்களே. தியான புத்தருக்கு மாற்றாக கணபதி என்னும் யாளி..
படத்தில் உள்ளபடி...
முதல் படம் தியானத்தில் இருக்கும் புத்தர் யானையாக. (ஜப்பான்)
2 மற்றும் 3 வாதாபி பிள்ளையார். பூணூல் இருக்காது.
4, 5 & 8 தென்னிந்திய யாளி வகைகள்
6 & 7. எகிப்து யாளி வகைகள்
No comments:
Post a Comment