பள்ளூர் புத்தர் திருக்கோயில். இந்தப் பகுதியில் ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிற்பங்கள் இங்கு பொது மக்களால் சிறிய கோயிலாக எழுப்பப்பட்டு வழிபடப்பட்டு வந்தது. இந்த புத்தர் திருக்கோயிலை மேலும் வழிபாட்டினை முன்னெடுக்க தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இங்குள்ள மூன்று சிற்பங்களும் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டு பழமையானவை. இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆய்வு செய்து சிற்பங்களின் தன்மை அவ
ற்றின் காலம் ஆகியவற்றை கண்டறியும் வகையில் இன்று கல்வெட்டியல் அறிஞர் முனைவர் பத்மாவதி மற்றும் ஆய்வாளர் முனைவர் சசிகலா நான் மூவரும் சென்றிருந்தோம்.
ஏறக்குறைய 9 ஆம் நூற்றாண்டு திருவருவங்கள் இவை. சிறிதளவு சிதைக்கப்பட்ட நிலையில் சிற்பங்கள் இருந்தாலும் பிரமாண்டமான வகையில் உருவாக்கப்பட்ட சிறப்புடன் இவை திகழ்கின்றன. பண்டைய வணிகப் பெருவழி பகுதியில் அமைந்திருக்கும் இப்பகுதி பௌத்த மதம் செழித்துப் பரவிய நகரங்களில் ஒன்றாக இணைந்திருக்க கூடிய வாய்ப்புகள் உண்டு.
-சுபா
No comments:
Post a Comment