Saturday, July 22, 2023

"தமிழகத்தில் பௌத்தம்" - நூல் திறனாய்வு

சரண்யா

எனக்கு சிறுவயதில் கோடியக்கரையில் ராமர் பாதம் என்று ஒன்று காட்டினார்கள்! அப்பொழுது எனக்குள் ஒரு கேள்வி, ராமர் என்பதே புனைவு கதை தானே அப்புறம் எப்படி அவருக்கு பாதம் வந்தது ? இந்த புத்தகத்தை படித்த பிறகு தான் தெரிகிறது அது புத்தர் பாதமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம் என்பது !

இன்றும் சிங்கப்பூர், சீனா, இந்தோனேசியா, இன்னும் பல நாடுகளில் புத்த பிக்குகள் அதிகமாக இருக்கின்றனர். சீனர்களில் பெரும்பாலானோர் bhudhism முறையை இன்றும் பின்பற்றுகிறார்கள் என்பதற்கு ஆச்சரியம் இல்லை!

இந்த புத்தகம் பல சங்க கால செப்பேடுகளும், பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் தொகுப்பு அடிப்படையில் எழுதப்பட்டது. தமிழ் மரபு அறக்கட்டளை முனைவரால் எழுதப்பட்டது .

புத்தர் என்பவர் 'சொல் 'செயல்' 'எண்ணம்' மூன்றும் ஒத்தவாறு இருக்க வேண்டும் என்பதை போதித்த ஒரு மிகவும் பழங்காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதராக இருக்கிறார். அவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல. கடவுள் வழிபாட்டை மறுத்தவர். அவர் மிருக மாமிசம் பலியிடுவதை உடன்படாதவர் ஆக அவர் சைவமாக இருந்திருக்கிறார்.

நிறைய புத்த விகாரங்கள் அப்பொழுது இருந்திருக்கிறது என்பதற்கு பல சான்றுகள் இருக்கின்றன. ஆனாலும் அப்பொழுது உள்ள புத்த பிக்குகள் வாழ்ந்த காலத்தில் தமிழகம் என்பது மிகவும் செழுமையான சோலைவனமாக இருந்திருக்கிறது. பூக்களாலும் தாமரை மலர்கள் நிறைந்த குளங்களாலும், மரங்களாலும் பறவைகளாலும் நிறைந்திருக்கிறது !! இப்படி செழுமையாக இருந்த தமிழகம் பல்வேறு இயற்கை சீற்றங்களால் அழிந்து பஞ்சத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது.

அப்பொழுது பல்வேறு அரசர்கள் பிக்குகளின் புத்த கொள்கைகளை ஆதரித்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அதனால்தான் அப்பொழுது நிறைய புத்த விகாரங்கள் ஆங்காங்கே இருந்திருக்கிறது. கடல் வழி ஊர்களில் அதிகமாக இருந்திருக்கிறது. அங்கு பல வெளிநாட்டவர்கள் வந்து சென்று கொள்கைகளை பல நாடுகளிலும் பரப்பி இருக்கிறார்கள். அதற்குப் பிறகும் அங்கு வந்து சென்று கொண்டிருந்தார்கள் என்பதற்கான குறிப்புகள் இருக்கிறார்கள்.

புத்த பிக்குகள் எல்லா நாடுகளுக்கும் சென்று அந்தந்த நாட்டு மொழியில் புத்த கொள்கைகளை பற்றி சொன்னதால் இன்றும் பல நாடுகளில் புத்த கொள்கைகளை பின்பற்றுகிறார்கள். ஆங்காங்கே இங்கு கிடைத்த புத்த சிலைகள் எப்படி மற்ற வழிபாட்டு சிலைகளாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதைப் ஆதாரங்களோடு இந்த புத்தகம் சொல்கிறது.

புத்தத்தில் வழிபாடு முறை என்பது கிடையாது. ஆனால் அதற்குப் பிறகு அது மாறி, பூக்களாலும் தூபங்களாலும் வழிபடும் வெவ்வேறு கடவுளாக மாற்றப்படுகிறது.

இன்றளவும் படுத்திருக்கும் நிலையிலும், அமர்ந்திருக்கும் நிலையிலும் புத்த சிலைகள் பல ஊர்களில் தமிழ்நாட்டில் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. அது மிகவும் பழமையான சிலைகள் என்பதற்கு பல தரவுகள் இருக்கின்றன.

இப்படி பல பல தகவல்களோடு இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.

வரலாற்றை தெரிந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி.